குரூப்-4 தேர்வு முடிவுகள்..!! மீண்டும் வெடித்த சர்ச்சை..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

குரூப்-4 தேர்வு முடிவுகள்..!! மீண்டும் வெடித்த சர்ச்சை..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!



Controversy erupted again over Group-4 exam results

அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 117 காலி பணியிடங்களில் ஸ்டெனோ டைப்பிங் பிரிவில் மட்டும் 2 ஆயிரத்து 500 காலி பணியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், 450 பேர் சங்கரன் கோவில் பகுதியில் தேர்வாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

ஒரே பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து, அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வாரங்கள் கடந்த நிலையில், இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.