மசாஜ் சென்டரில் கல்லூரி மாணவர்கள் செய்யும் காரியமா இது? அதிரடி கைது!

மசாஜ் சென்டரில் கல்லூரி மாணவர்கள் செய்யும் காரியமா இது? அதிரடி கைது!



College students arrested in massage parlour

சென்னையில் பிரபல மசாஜ் சென்டர் ஒன்றில் கல்லூரியை சேர்ந்த சில இளைஞர்கள் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரை அருகே செயல்பட்டுவரும் இந்த மசாஜ் சென்ட்ரல் மசாஜ் செய்பவர்கள் மற்றும் மசாஜ் செய்ய வரும் வாடிக்கையாளர்களை ஒரு மர்ம கும்பல் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளரை மிரட்டியுள்ளது.

மேலும், மசாஜ் சென்டரின் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த இவர்கள் வேறுசில மசாஜ் சென்டர்களில் பணிபுரியும் பெண்களையும் மிரட்டி பாலியல் கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் அந்த பார்லருக்கு விரைந்தனர்.

அங்கு  சில இளைஞர்களைக் கைது செய்தனர். மற்றவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்தனர். அவர்களையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.