ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, காதல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர்.! போக்சோவில் சிக்கி சிறையில் அடைப்பு.!

ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, காதல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர்.! போக்சோவில் சிக்கி சிறையில் அடைப்பு.!



college student love torture to school girl

கோவையை சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவர் ஒருவர் தான் வசிக்கும் பகுதியை சேர்ந்த பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை தினமும் பின் தொடர்ந்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி இதனை பொருட்படுத்தாதால் இருந்துள்ளார். அடுத்தகட்டமாக அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு பலமுறை வற்புறுத்தியுள்ளார்.

மாணவி பல முறை மறுத்து எதிர்ப்பு தெரிவித்த பிறகும், பின் தொடர்வதையும், காதலிக்குமாறு வற்புறுத்துவதையும் அந்த மாணவர் தொடர்ந்துவந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி, பெற்றோரிடம் தனக்கு ஒருவர் தொல்லை கொடுப்பது பற்றி தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுதொடர்பாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.