நா இதுமாதிரி பண்ணதுக்கு என்ன மன்னிச்சுடுங்க!. நா தற்கொலை செய்துகொண்டதுக்கு இதுதான் காரணம்!. மாணவியின் குமுறல்!.

நா இதுமாதிரி பண்ணதுக்கு என்ன மன்னிச்சுடுங்க!. நா தற்கொலை செய்துகொண்டதுக்கு இதுதான் காரணம்!. மாணவியின் குமுறல்!.


college girl suicide in hostel, police got letter in a room


திருச்சி மாவட்டத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்த தேன்மொழி என்ற மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகள் தேன்மொழி இந்த கல்லூரி விடுதியில் தங்கி, பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தக்வலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோலீசார் அங்கு தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

college girl

மாணவி தேன்மொழி தங்கி இருந்த அறையை சோதனை செய்தபோது அவர் எழுதிவைத்துள்ள உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், “நான் இதய பிரச்சனையால் நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தேன். என்னால் இந்த வலியை தாங்கி கொள்ளமுடியவில்லை, அதனால் தான் முடிவை எடுக்க முடிவெடுத்தேன். யாரும் வருத்தப்படாதீங்க. கோபப்படாதீங்க, எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க” என எழுதப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கல்லூரி நிர்வாகம் தரப்பில்  3 நாட்களுக்கு கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.