9 வயது முதல் 13 வயது வரை 14 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : 62 வயது கிழட்டு காமுகன் கைது.. மளிகைக்கடையில் பகீர்.!

9 வயது முதல் 13 வயது வரை 14 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : 62 வயது கிழட்டு காமுகன் கைது.. மளிகைக்கடையில் பகீர்.!



coimbatore-pollachi-14-minor-girl-sexual-harassed-by-gr

கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிறுமிகளிடம் பேச்சுக்கொடுத்தவாறு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது கிழட்டு காமுகன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 62), இவர் சொந்தமாக மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் தினமும் பல மக்கள் மளிகைப்பொருள் வாங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், தனது கடைக்கு வரும் சிறுமிகளிடம் காமுகன் நடராஜன் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளான். இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருந்து வந்துள்ளது. 

இதற்கிடையில், ஆனைமலை பள்ளியில் காவல் துறையினர் சார்பில் நடந்த தொடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில், 13 வயது மாணவி நடராஜனின் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Coimbatore

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 9 வயது சிறுமிகள் முதல் 13 வயது சிறுமி வரை என நடராஜன் 14 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. 

இதனையடுத்து, நடராஜனின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.