நடிகையாக ஆசை.. இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்து, சீரழித்த போட்டோகிராபர்..! பகீர் செயல்.!

நடிகையாக ஆசை.. இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுத்து, சீரழித்த போட்டோகிராபர்..! பகீர் செயல்.!



Coimbatore Ondipudur Woman Sexual Abused by Photographer Naked Photos Innocent Girl Wish Cinema

சினிமா ஆசை கொண்டிருந்த இளம்பெண்ணை ஏமாற்றி நிர்வாண படமெடுத்து பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய போட்டோகிராபர் கோவை அருகே கைது செய்யப்பட்டுள்ள பதைபதைப்பு சம்பவம் நடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியை சார்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் முடித்து 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கூலிவேலைக்கு சென்று வரும் நிலையில், பெண்மணிக்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இந்த நிலையில், பெண்மணிக்கு மதுரையை சார்ந்த புகைப்படக்கலைஞர் கணேஷ் ஆனந்த் (வயது 34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

கணேஷ் அங்குள்ள கணபதி தெரு பகுதியில் வாடைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், இளம்பெண்ணிடம் புகைப்படக்கலைஞர் கணேஷ் ஆனந்த் பல கோணத்தில் புகைப்படம் எடுத்தால் தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இருக்கிறார். இளம்பெண்ணும் திரைத்துறை வாய்ப்பு ஆசையில் சம்மதம் தெரிவித்துள்ளார். 

Coimbatore

இதனையடுத்து, கணேஷ் ஆனந்த் பெண்ணை பல இடங்களுக்கு அழைத்து சென்று புகைப்படம் எடுத்த நிலையில், கடந்த டிச. 3 ஆம் தேதி தனது வீட்டில் வைத்து பலகோணத்தில் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கணேஷ் கூறியுள்ளார். இதனை நம்பி சென்ற இளம்பெண்ணை முதலில் முழு ஆடையுடன் புகைப்படம் எடுத்த கணேஷ் ஆனந்த், அரைகுறை ஆடையுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

ஆடையை குறைத்து ஆபாசமாக புகைப்படம் எடுக்க பெண்மணி மறுப்பு தெரிவிக்கவே, அரைகுறை ஆடையுடன் புகைப்படம் எடுத்தால் தான் திரைப்பட வாய்ப்பு கிடைக்கும் என்று மீண்டும் ஆசைவார்த்தை கூறி இறுதியில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர், இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

Coimbatore

பெண் மயங்கி எழுந்ததும் நடந்ததை வெளியே கூறினால் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வேன் என்று மிரட்டி வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார். பயந்துபோன பெண்மணியும் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று தனது ஆபாச புகைப்படத்தை பெற பெண்மணி கணேஷ் ஆனந்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது. 

கணேஷ் ஆனந்தின் செல்போனுக்கு தொடர்பு கொள்கையில், சுவிட்ச் ஆப் என வந்ததால் பயந்துபோன பெண்மணி வீட்டிற்கு சென்று கணவரிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, பெண்ணின் கணவர் விஷயம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கணேஷ் ஆனந்தை டிச. 25 ஆம் தேதி கைது செய்தனர். 

Coimbatore

திரைத்துறை ஆசைகொண்ட பல பெண்களும் இவ்வாறாக பலரால் தொடர்ந்து சூறையாடப்படுவது தொடர்கதையாகியுள்ளது. திரைத்துறையிலேயே பல பாலியல் புகார்கள் வழக்குகூட ஆகாமல் மறைக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற துயரங்களை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.