சித்த மருத்துவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்..!!

சித்த மருத்துவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்..!!


Coimbatore Minor Boy Sexual Harassment Sidha Doctor

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாய்பாபா காலனி, பி.என் புதூர் பகுதியில் வசித்து வரும் 42 வயது பெண்மணி சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார்‌. இவர் சம்பவத்தன்று காலை நேரத்தில் கோகுலம் காலனி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். 

அப்போது, அவருக்கு பின்னால் வந்த சிறுவன் ஒருவன் சித்த மருத்துவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் விரைந்துள்ளனர். இதனால் பதறிப்போன சிறுவன் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளான். 

இந்த விஷயம் தொடர்பாக சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் சித்த மருத்துவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இந்த குற்றத்தில் ஈடுபட்டது ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் 15 மாணவன் என்பது உறுதியானது. 

இதனையடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.