ஓடும் ரயிலில் இளம் பெண் முன்பு ஆபாச சைகை செய்த பாதிரியார் கைது.!

ஓடும் ரயிலில் இளம் பெண் முன்பு ஆபாச சைகை செய்த பாதிரியார் கைது.!



Church father harassment to girl in train

ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் ஆபாச சைகை செய்த கோவை பாதிரியாரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் பாதிரியார் ஜேஜிஸ். இவர் கோவையில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு ரயிலில் புறப்பட்டார். அப்போது பாதிரியார் பயணம் செய்த பெட்டியில் மிகவும் குறைந்த பயணிகளை இருந்துள்ளனர்.

KERALA

அப்போது ரயில் காசர்கோட்டை தாண்டி சென்று கொண்டிருந்த போது, அந்த பெட்டியில் இருந்த 35 வயதான இளம் பெண் முன்பு பாதிரியார் ஆபாச சைகை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அடுத்த பெட்டியில் இருந்த தனது கணவருக்கு போன் செய்து கூறியுள்ளார்.

KERALA

இதனையடுத்து வந்த அந்த பெண்ணின் கணவர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரயில் கண்ணூர் வந்ததும் பாதிரியாரை ரயில்வே போலீசார் மடக்கிப்பிடித்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு காசர்கோடு ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர்.