பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்! குவிந்துவரும் பாராட்டுக்கள்!

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி! ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்! குவிந்துவரும் பாராட்டுக்கள்!



child born in ambulance

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்து ராப்பூசல் அருகே உள்ள எருக்குமணிப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி ஐஸ்வர்யா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தநிலையில் அவருக்கு நேற்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஐஸ்வர்யா ராப்பூசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த கர்ப்பிணியை புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஐஸ்வர்யாவை அனுப்பிவைத்தனர்.

ambulance

இந்நிலையில் புதுக்கோட்டை நோக்கி 108 ஆம்புலன்ஸ்  சென்றபோது  முத்துடையான்பட்டி என்னும் இடத்தில் ஐஸ்வர்யாவுக்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டு துடிதுடித்துள்ளார், இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு ஆம்புலன்சிலேயே மருத்துவ  உதவியாளர் பூபதிராஜா, ஆம்புலன்ஸ் டிரைவர் தேவா பாஸ்கரன் ஆகியோர்  பிரசவம் பார்த்தனர்.

இதனையடுத்து ஆம்புலன்ஸிலேயே சிறிது நேரத்தில்  சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய் ஐஸ்வர்யா மற்றும் குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவ  உதவியாளர் பூபதிராஜா, ஆம்புலன்ஸ் டிரைவர் தேவா பாஸ்கரன் ஆகியோரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும் இந்த ஆண்டில் அந்த 108 ஆம்புலன்ஸில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.