தாயுடன் கள்ளக்காதல் வைத்திருந்த திமுக பிரமுகரை, நண்பர்களுடன் சேர்ந்து துள்ளத்துடிக்க கொலை செய்த மகன்.!

தாயுடன் கள்ளக்காதல் வைத்திருந்த திமுக பிரமுகரை, நண்பர்களுடன் சேர்ந்து துள்ளத்துடிக்க கொலை செய்த மகன்.!



Chennai Triplicane DMK Supporter Murder Case Affair Ends Kill Life by 7 Man Team

சென்னையில் உள்ள திருவெல்லிக்கேணி, காந்தி நகரில் வசித்து வருபவர் மதன் (வயது 36). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 வருடத்திற்கு முன்னர் வரை அதிமுகவில் துறைமுகம் தொகுதி, 59 ஆவது வார்டு பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த மதன், உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் திமுகவில் இணைந்துள்ளார். இதனையடுத்து, உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்குசேகரித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில், திருவெல்லிக்கேணி பகுதியில் திமுக நிர்வாகியின் படத்திறப்புவிழா நடைபெற்ற நிலையில், இந்நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபுவும் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் திருவெல்லிக்கேணி எஸ்.எம் நகர் 8 ஆவது தெருவில் மதன் நின்றுகொண்டு இருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் மதனை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியுள்ளது. அவர்களிடம் இருந்து மதன் தப்பிக்க முயற்சித்து ஓடியபோதும், மர்ம கும்பல் விரட்டி சென்று படுகொலையை நிகழ்த்திவிட்டு தப்பி சென்றது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு சூழல் ஏற்பட, காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்து கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு கருதி களமிறக்கப்பட்டனர். மேலும், மதனின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவெல்லிக்கேணி காவல் துறையினர், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். 

chennai

விசாரணையில், சம்பவ இடத்திற்கு அருகே இருந்த சி.சி.டி.வி கேமிரா மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் நடந்த விசாரணையில் கொலைக்கான அதிர்ச்சி காரணமும் தெரியவந்துள்ளது. கொலையான மதனுக்கும், அப்பகுதியில் வசித்து வரும் கணவரை இழந்து வாழ்ந்து வரும் பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் பெண்ணின் மகனுக்கு தெரியவரவே, அவரின் மகன் மதனை கண்டித்துள்ளார். இதனை கேட்காத மதன் பெண்ணுடன் கொண்ட தொடர்பை கைவிடாத நிலையில், ஆத்திரமடைந்த பெண்ணின் மகன் நண்பர்களிடம் தகவலை தெரிவித்து மதனை அனைவரும் சேர்ந்து கொலை செய்வோம் என்று கூறியுள்ளார். அவர்களின் திட்டப்படி, சம்பவத்தன்று அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இருந்த மதன், தனியாக வந்துள்ளார். 

இதனால் கொலை திட்டத்தை அரங்கேற்றிய கும்பல், மதனை சுற்றிவளைத்து வெட்டி சாய்த்துள்ளது. உயிர் பயத்தில் தப்பியோடிய மதனை, ஓடஓட விரட்டியும் படுகொலை செய்துள்ளது. இந்த கொலை தொடர்பான சம்பவத்தில் பெண்ணின் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் 3 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.