ஓடஓடவிரட்டி பயங்கரம்.. கும்பலால் 57 வயது நபர் படுகொலை.!

ஓடஓடவிரட்டி பயங்கரம்.. கும்பலால் 57 வயது நபர் படுகொலை.!



Chennai T Nagar Man Killed in Tharamani Area 

 

சென்னையில் உள்ள தி.நகர், மேடலி சாலையில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 57). சம்பவத்தன்று சென்னை வேளச்சேரி பகுதியில் இவர் சென்றுகொண்டு இருந்தார். 

அச்சமயம் கும்பல் ஒன்று இவரை இடைமறித்து ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. சம்பவத்தை நேரில் பார்த்து பதறிப்போன மக்கள் தரமணி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.