#Breaking: சென்னையில் புறநகர் மின்சார இரயில் தடம்புரண்டு விபத்து..! 



Chennai Sub Urban Electric Train Derailed 

 

சென்னையில் உள்ள அண்ணனூர் பணிமனையில் இருந்து, ஆவடி நோக்கி வந்த மின்சார இரயிலானது தற்போது தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் இரயிலின் கடைசி 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழிறங்கி விபத்திற்குள்ளாகின. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இரயில்வே அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.

பணிமனையில் இருந்து இரயில் வந்ததால், பயணிகள் யாரும் இரயிலில் இல்லை. இதனால் சென்னை செல்லும் புறநகர் இரயில் சேவை பாதிப்பை சந்திக்க தொடங்கியுள்ளது.