2 நாட்கள் காமகளியாட்டம்.. 3வது நாள் மறுத்த நண்பனின் ஆணுறுப்பில் கொதிக்கும் நீர் ஊற்றிய பயங்கரம்.!



chennai-same-sex-relationship-man-murder-attempt

சென்னையில் உள்ள பூவிருந்தவல்லி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது 25). காஞ்சிபுரத்தை சேர்ந்த அஜித் (வயது 24). இவர்கள் இருவரும் டேட்டிங் ஆப் மூலமாக பேசி பழகி வந்த நிலையில், பாலகுருயுடைய பெற்றோர் மும்பைக்கு சென்றுள்ளனர்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அஜித்தை வீட்டிற்கு பாலகுரு அழைத்துள்ளார். இருவரும் இரவு பகல் பாராது தீவிரமாக ஓரினச்சேர்க்கை மேற்கொண்ட நிலையில், பாலகுரு நேற்று சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிய வருகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த அஜித் தனக்கு கிடைக்காத உறுப்பு வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என எண்ணி பாலமுருகன் மீது சுடுதண்ணீரை கொதிக்க வைத்து ஊற்றியுள்ளார். 

இதில் அவரின் கைவயிறு, மார்பு உள்பட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. பின் பாலகுருவை ஒரு அறையில் வைத்தும் பூட்டியிருக்கிறார். இந்நிலையில் பாலகுருவுடைய அலறல் சத்தம் கேட்டு வந்த வீட்டு உரிமையாளர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வாக்குமூலத்தின் பேரில் அஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.