இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை?.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை?.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai RMC Announcement Rain Update

மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுவையில் இன்று மழை பெய்யும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 22, 23ஆம் தேதியை பொறுத்தவரையில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

chennai

24 மற்றும் 25ஆம் தேதியை பொறுத்தவரையில், தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

chennai

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 22ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும் மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென்தமிழக கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.