இன்று தமிழத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இன்று தமிழத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



chennai-rmc-announcement-rain-29-oct-2022

கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆந்திர கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 29 ஆம் தேதியான இன்று, "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 30 ஆம் தேதி மற்றும் 1ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

chennai

2ம் தேதி மற்றும் 3ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானமேகம் மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம். 

அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று வட தமிழக ஆந்திர கடலோர பகுதி, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல், தென்கிழக்கு & அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்படுகிறது.