இன்று 6 மாவட்டங்களில் கனமழை; 31ம் தேதி வரை தமிழகத்தில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இன்று 6 மாவட்டங்களில் கனமழை; 31ம் தேதி வரை தமிழகத்தில் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai RMC Announcement 29 March 2023

தேனி, தென்காசி, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்ப நிலையாக ஈரோட்டில் 22 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 

அடுத்த ஐந்து தினங்களுக்கான முன்னறிவிப்பை பொருத்தவரையில், "தென்னிந்திய பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி காரணமாக 29- ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

chennai

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 30- ஆம் தேதியை பொருத்தவரையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31-ஆம் தேதி முதல் 2-ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம்.