அடுத்த 1 மணிநேரத்தில் கீழ்காணும் மாவட்டங்களில் மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

அடுத்த 1 மணிநேரத்தில் கீழ்காணும் மாவட்டங்களில் மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



chennai-rmc-announcement

 

புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருவள்ளூர் உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த 1 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் லேசான மலை முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

chennai

இந்த நிலையில், இன்று விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.