அடுத்த 5 நாட்களுக்கு தமிழத்தை குளிர்விக்கப்போகும் மழை.. இடி-மின்னலுடன் மழை வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.!

அடுத்த 5 நாட்களுக்கு தமிழத்தை குளிர்விக்கப்போகும் மழை.. இடி-மின்னலுடன் மழை வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.!



Chennai RMC Announce Rain 5 Days

இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு திசைக்காற்று, மேற்கு திசைக்காற்று காரணமாக, 18-ம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

20-ம் தேதியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21 ஆம் தேதியில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

chennai

22 ஆம் தேதி கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமற்றத்துடன் காணப்படலாம். 

நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம். நகரில் அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.