Rain Alert Tamilnadu: அடுத்த 3 மணிநேரத்தில் 35 மாவட்டங்களில் மழை; லிஸ்ட் இதோ - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Rain Alert Tamilnadu: அடுத்த 3 மணிநேரத்தில் 35 மாவட்டங்களில் மழை; லிஸ்ட் இதோ - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai RMC Announce 35 Districts Rain in Tamilnadu 

கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தஞ்சாவூர், தருமபுரி, திருவள்ளூர் உட்பட 35 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நேற்றில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் குளுகுளு சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இன்று முதல் 29ம் தேதி வரையிலும் இடி-மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழைக்கு பல்வேறு மாவட்டங்களில் வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. 

இந்நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, 

Chennai RMC

தர்மபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாமக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், சென்னை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவாரூர், 

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கோவை, சிவகங்கை, திருப்பூர், நீலகிரி, கரூர், தேனி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.