மகனின் பிறந்தநாளில் படுகொலை செய்யப்பட்ட இரும்பு வியாபாரி.. 5 பேர் கும்பலால் நடந்த பயங்கரம்.. பரபரப்பு பின்னணி.!

மகனின் பிறந்தநாளில் படுகொலை செய்யப்பட்ட இரும்பு வியாபாரி.. 5 பேர் கும்பலால் நடந்த பயங்கரம்.. பரபரப்பு பின்னணி.!



Chennai Pulianthope Man Murder 5 Man Gang Arrested

 

திருட்டு செல்போன் வாங்குவது தொடர்பாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தவரை கும்பலாக சேர்ந்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள புளியந்தோப்பு, ஏ.எம் கார்டனில் வசித்து வருபவர் முனுசாமி (வயது 37). சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், அல்லிக்குளம் வணிக வளாகத்தில் பழைய இரும்பு கடை நடத்துகிறார். 

நேற்று முன்தினம் இரவில் வணிக வளாகத்திலேயே முனுசாமி வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பெரியமேடு காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், திருவள்ளூர் நகர காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் வந்த 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

chennai

அவர்கள் கொடுங்கையூரை சேர்ந்த அஷ்ரப் அலி (வயது 28), வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27), புளியந்தோப்பு அப்பாஸ் (வயது 28), சூளை கிஷோர் (வயது 29), அல்லிக்குளம் ஆபிரஹாம் (வயது 19) என்பது உறுதியானது.

இவர்கள் அனைவரும் முனுசாமியை கொலை செய்து தப்பிச்சென்றவர்கள் என்பது உறுதியானது. இதனையடுத்து, அனைவரும் பெரியமேடு காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

chennai

விசாரணையில், அல்லிக்குளம் செல்போன் கடையில் அஷ்ரப், அப்பாஸ் ஆகியோர் பணியாற்றி இருக்கின்றனர். இவர்கள் திருட்டு செல்போன் வாங்கியது தொடர்பாக முனுசாமி காவலர்களுக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக நடந்த முன்பகை காரணமாக அஷ்ரப் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து முனுசாமியை கொலை செய்துள்ளார். முனுசாமிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், மகனின் பிறந்தநாளில் தந்தை முனுசாமி கொலை செய்யப்பட்டுள்ளார்.