லாரி - கார் மோதி பயங்கர .விபத்து... 3 பேர் பரிதாப பலி..! சென்னை அருகே சோகம்.!!

லாரி - கார் மோதி பயங்கர .விபத்து... 3 பேர் பரிதாப பலி..! சென்னை அருகே சோகம்.!!


Chennai Porur Near Road Car Lorry Crash 3 Died

நின்றுகொண்டு இருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னையில் உள்ள மாங்காடு கொழுமணிவாக்கம் பகுதியை சார்ந்தவர் எலக்ட்ரீசியன் சங்கர் (வயது 60). இவரது மகன் மகேஷ் (வயது 33). மகேஷின் நண்பர் சின்னராஜ் (வயது 28). இவர்கள் மூன்று பேரும் சபரிமலை செல்ல மாலை போட்டுள்ளனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சபரிமலை சென்ற மூவரும், சாமி தரிசனம் செய்துவிட்டு அதிகாலை நேரத்தில் திரும்பி வந்துகொண்டு இருந்தனர். இவர்களின் வாகனம் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் வருகையில், சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியுள்ளது. 

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த சங்கர் மற்றும் சின்னராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மகேஷ் சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். 

chennai

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. 

சபரிமலைக்கு சென்று திரும்புகையில் ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகன் மற்றும் நண்பர் உயிரிழந்த பரிதாபமாக பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.