ஆன்லைன் ரம்மியால் ரூ.41 இலட்சம் கடன்... கழுத்தை நெரித்த தொல்லையால் தற்கொலை.!

ஆன்லைன் ரம்மியால் ரூ.41 இலட்சம் கடன்... கழுத்தை நெரித்த தொல்லையால் தற்கொலை.!



Chennai Porur Man Suicide Due to Loss Money Online rummy

சென்னையில் உள்ள கோயம்பேடை சார்ந்தவர் தினேஷ் (வயது 41). இவர் அப்பகுதியில் கம்பியூட்டர் மையம் நடத்தி வரும் நிலையில், இன்று அதிகாலை தீடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கோயம்பேடு காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல் துறையினர், தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

chennai

பின்னர், வீட்டில் நடந்த சோதனையில் தினேஷின் கடிதத்தை கைப்பற்றிய அதிகாரிகள், அவருக்கு ரூ.41 இலட்சம் கடன் இருந்ததை உறுதி செய்துள்ளனர். வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாத காரணத்தால், தற்கொலை செய்துகொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையில், தினேஷ் தனது நண்பர்கள் பலரிடமும் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் பணத்தை இழந்து கடனை திருப்பி செலுத்த இயலாமல் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.