8 பிள்ளைகளை பெற்றெடுத்தும் கோவிலில் பிச்சையெடுக்கும் 94 வயது மூதாட்டி..! நெஞ்சை உலுக்கும் சோகம்.!!

8 பிள்ளைகளை பெற்றெடுத்தும் கோவிலில் பிச்சையெடுக்கும் 94 வயது மூதாட்டி..! நெஞ்சை உலுக்கும் சோகம்.!!



Chennai Minjur Aged Woman Want Help Sons and Daughter Avoid It

சென்னையில் உள்ள மீஞ்சூர் பகுதியை சார்ந்தவர் அலமேலு (வயது 94). இவருக்கு 5 மகன்கள், 3 மகள்கள் என 8 பிள்ளைகள் உள்ளனர். அலமேலுவுக்கு மீஞ்சூர் பகுதியில் பலகோடி மதிப்புள்ள வீடு, கடை உள்ளது. 

கடந்த 2010 ஆம் வருடம் அலமேலுவின் கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில், சொத்துக்களை விற்பனை செய்து மகன் மற்றும் மகளுக்கு அலமேலு பிரித்து கொடுத்துள்ளார். 

சொத்துக்களின் பங்குகளை பெற்றதும் மூதாட்டி அலமேலுவை பிள்ளைகள் கவனிக்க முன்வரவில்லை. மேலும், தனது தாயை பிள்ளைகள் அனைவரும் விரட்டியடித்துள்ளனர். 

chennai

இதனால் பராமரிக்க ஆட்கள் இல்லாமல், உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்ட மூதாட்டி அலமேலு, மீஞ்சூரில் உள்ள கோவிலில் பிச்சையெடுத்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.  

பெற்றெடுத்த பிள்ளைகள் தாய்க்கு செய்யக்கூடாத பெரும் கொடூரமாக, மூதாட்டியின் கைகளையும் உடைத்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. இதனால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.