தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பு.!

தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பு.!



Chennai meotrological centre announced heavy rainfall

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று காலை அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில்‌ நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ அக்டோபர்‌ 22-ஆம்‌ தேதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அக்டோபர்‌ 23 ஆம்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்‌. பிறகு வடதிசையில்‌ நகர்ந்து மத்திய மேற்கு மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதியில்‌ புயலாக 24 ஆம்‌ தேதி வாக்கில்‌ வலுபெறக்கூடும்‌. பிறகு 25 ஆம்‌ தேதி வாக்கில்‌ மேற்கு வங்காளம்‌ மற்றும்‌ வங்கதேச கடற்கரை நோக்‌கி நகரக்கூடும்‌.

20ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர்‌, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, திருச்‌சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, ஈரோடு, கிருஷ்ணரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, கள்ளக்குறிச்‌சி, இராணிப்பேட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காடு, தூத்துக்குடி, இராமநாதபுரம்‌, விருதுநகர்‌, தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருப்பூர்‌, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

chennai

அடுத்த 24 மணிநேரத்‌திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்காக எச்சரிக்கையாக, "20ஆம் தேதியான இன்று தென்‌கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 55 கிலோமீட்டர்‌ வேகத்‌திலும்‌ வீசக்கூடும்‌. கேரள கடலோர பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 கிலோமீட்டர்‌ வேகத்‌திலும்‌ வீசக்கூடும்‌.

21ஆம் தேதியை பொறுத்தவரையில் தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ மத்‌திய கிழக்கு வங்கக்கடல்‌, அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 55 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.