பெண்கள் பெயரில் உள்ள காலி இடம் டார்கெட்.. நில அபகரிப்பு புகாரில் 3 பேர் கைது.!!

பெண்கள் பெயரில் உள்ள காலி இடம் டார்கெட்.. நில அபகரிப்பு புகாரில் 3 பேர் கைது.!!



Chennai Kovilambakkam Land Occupy Forgery Issue Police Arrested 3 Members

சென்னையில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியை சார்ந்தவர் ஹேமலதா (வயது 63). இவருக்கு சொந்தமான 3,745 சதுர அடி காலி இடம், போலியான ஆவணம் மற்றும் அடையாள அட்டை வைத்து அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இதனைப்போல, அம்பத்தூர் புத்தகரம் பகுதியை சார்ந்த புனிதவதி என்பவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி காலி மனை அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளன. 

chennai

இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடவே, விசாரணைக்கு பின்னர் பழைய பல்லாவரம் பகுதியை சார்ந்த சரவணன் (வயது 37), அஸ்தினாபுரம் பகுதியை சார்ந்த மனோகர் (வயது 47), கொளத்தூரை சார்ந்த ராமராஜ் (வயது 33) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் முறைகேட்டில் ரூ.50 இலட்சம் வரை ஆதாயம் பெற்றுள்ளதும் உறுதியானது.