டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரம்; 16 வயது சிறுமி தற்கொலை.!



Chennai Kovilambakkam Child Died Suicide 

 

சென்னை கோவிலம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் சிறுமி ஹரிதா (வயது 16). சிறுமி தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். 

நேற்று இரவில் சிறுமி தனக்கு பிடித்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். 

இதனைக்கண்ட பெற்றோர், "படிக்காமல் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கிறாய். படிப்பில் கவனம் செலுத்து" என கண்டித்துள்ளனர். 

இதனால் விரக்தியடைந்த சிறுமி, தனது அறையில் விபரீத முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

காலையில் எழுந்த பெற்றோர், மகள் நீண்ட நேரம் ஆகியும் அறையில் இருந்து வெளியே வராமல் இருந்ததால் அறைக்குள் சென்று பார்த்தபோது விபரீதம் புரிந்தது. 

இதனையடுத்து, தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.