தாயை அவதூறாக பேசிய தந்தையின் கதைமுடித்த பாசக்கார மகன்.. பதறவைக்கும் சம்பவத்தில் தாய்ப்பாசம்.!

தாயை அவதூறாக பேசிய தந்தையின் கதைமுடித்த பாசக்கார மகன்.. பதறவைக்கும் சம்பவத்தில் தாய்ப்பாசம்.!



Chennai KK Nagar Son Kills Father When Liquor Audit Father Abuse Speech about Mother

சென்னையில் உள்ள கே.கே நகர் அம்பதேகர் குடிலை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் வயதான தம்பதிகளுக்கு உதவி செய்யும் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் தேசமுத்து. இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில், இன்று காலை நேரத்தில் தேசமுத்து படுக்கையில் பேச்சு மூச்சின்றி கிடைக்கவே, கணவரை மீட்ட மனைவி முனியம்மாள் சிகிச்சைக்காக கே.கே நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு தேசமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த தகவலை அறிந்த எம்.ஜி.ஆர் நகர் காவல் துறையினர், தேசமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவே, தேசமுத்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. 

chennai

நேற்று காலை முதல் இரவு வரை தனது மனைவியை தகாத வார்த்தையால் திட்டி தேசமுத்து தகராறு செய்த நிலையில், இதுகுறித்து நேற்று இரவு நேரத்தில் தேசமுத்துவிற்கும், அவரின் மகன் டேவிட் என்ற விஜய்க்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. தகராறு முடிந்து அனைவரும் உறங்க சென்றுவிட்ட நிலையில், தாயை எப்படி தந்தை திட்டலாம் என்று டேவிட் என்ற விஜய் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். 

அனைவரும் உறங்கியதும் ஆத்திரத்திலேயே இருந்து வந்த விஜய், தனது தந்தையை செல்போன் சார்ஜ் வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து, விஜயை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.