4 நாட்கள் அனைவரும் இதனை செய்தாலே கொரோனா குறைந்து விடும்.! மாநகராட்சி ஆணையர் தகவல்.!

4 நாட்கள் அனைவரும் இதனை செய்தாலே கொரோனா குறைந்து விடும்.! மாநகராட்சி ஆணையர் தகவல்.!


chennai-corporation-commissioner-talk-about-corona

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன .

தமிழகத்தில் கொரோனா சமீப காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று சென்னையில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசினார். 

corona

அவர் கூறுகையில், கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிரமாக அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லுங்கள். அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது  லேசான அறிகுறிகள் இருந்தாலோ உங்கள் வார்டு சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். 

மே மாதம் மத்தியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். சென்னையில் 4 நாட்கள் அனைவரும் முறையாக மாஸ்க் அணிந்தாலே கொரோனா குறைந்து விடும் என தெரிவித்தார்.