வாட்ஸப்பில் மெசேஜ், வீடியோ கால்.. மனைவியை பார்த்த கணவன்., எடுத்த விபரீத முடிவால் சோகம்.!

வாட்ஸப்பில் மெசேஜ், வீடியோ கால்.. மனைவியை பார்த்த கணவன்., எடுத்த விபரீத முடிவால் சோகம்.!



chengalpatu-women-suicide-for-family-suspicion

செல்போனில் அதிகமாக குறுந்தகவல்கள் வந்ததையடுத்து, ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு பகுதியில் வசித்து வருபவர்கள் சுரேஷ் - கலைவாணி தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சுரேஷ் தன்னுடைய நண்பருக்கு கால் செய்வதற்காக தனது மனைவியின் செல்போனை எடுத்த நிலையில், அவரது செல்போனில் நிறைய குறுந்தகவல்கள் இருந்தது தெரியவந்தது.

அத்துடன் அவருக்கு அதிகமாக வாட்ஸ்அப் வீடியோ கால் வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அவர் தனது மனைவியிடம் கேட்ட நிலையில், அதற்கு பதில் அளிக்காமல் கலைவாணி அமைதியுடன் இருந்துள்ளார். தொடர்ந்து சுரேஷ் தனது பெற்றோர் மற்றும் தனது மனைவியின் பெற்றோருக்கு இது குறித்து தெரிவித்துள்ளார்.

இதனால் கலைவாணியின் நடத்தையில் அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கலைவாணி மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும், நேற்று முன்தினம் இரவு சுரேஷ் வெளியே படுத்திருந்தபோது, தனியாக இருந்த கலைவாணி படுக்கை அறையில்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

chengalpatu

அத்துடன் நேற்று காலை வெளியில் படுத்திருந்த சுரேஷ் உள்ளே சென்று பார்த்தபோது, தனது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து , உடனடியாக அவரது உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இருப்பினும் கலைவாணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிய வர, வழக்குப்பதிந்த செங்கல்பட்டு டவுன் காவல்துறையினர் குறுந்தகவல்கள் மற்றும் வீடியோ கால் அனுப்பியது யார்? எனவும், கலைவாணியை குறுந்தகவல்கள் அனுப்பி மிரட்டினாரா? அல்லது வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 6 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் பெண் உயிரிழந்ததால், செங்கல்பட்டு ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.