மேல்மருவத்தூர் அருகே கோர விபத்து.. சரக்கு வேன் - லாரி மோதிய விபத்தில், 3 பேர் பலி, 11 பேர் படுகாயம்.!

மேல்மருவத்தூர் அருகே கோர விபத்து.. சரக்கு வேன் - லாரி மோதிய விபத்தில், 3 பேர் பலி, 11 பேர் படுகாயம்.!


Chengalpattu Melmaruvathur Near NH Accident 3 Died 11 Injured Return Chennai Form Theni

குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பிய குடும்பத்தினர் விபத்தில் சிக்கிய நிலையில், வாகனத்தில் பயணித்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் உள்ள பல்லாவரம், கெருகம்பாக்கம் அன்னை இந்திரா நகரில் வசித்து வந்தவர்கள், தங்களது குடும்பத்தினர் 14 பேருடன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள உச்சம்பட்டி கிராமத்தில் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் முடிந்ததும், அனைவரும் தாங்கள் சென்ற சரக்கு வேனில் சென்னை நோக்கி பயணம் செய்துள்ளனர். 

இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், மேல்மருத்துவர் சோத்துப்பாக்கம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர். அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், திடீரென சாலையோரத்தில் நின்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியுள்ளது.

Chengalpattu

வாகனத்தில் பயணம் செய்த தங்கபாண்டி (வயது 30), வீரன் (வயது 60), யாழினி (வயது 3) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வாகன ஓட்டுநர் பாண்டியன், வேனில் பயணித்த ரமேஷ், ராமு, சுரேஷ், திவ்யா, அமுதா, பஞ்சம்மாள் மற்றும் ஜோதி, குழந்தைகள் ஹரிதா, ஆர்த்தி, பிரபாகரன் ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த மேல்மருவத்தூர் காவல் துறையினர், விபத்தில் பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் காயமடைந்தோரை மீட்டு மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.