கோவையில் பரபரப்பு.. நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த போலீஸ் சஸ்பெண்ட்!

கோவையில் பரபரப்பு.. நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த போலீஸ் சஸ்பெண்ட்!



Chain snatching police suspended

கோவை அருகே தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் தங்க சங்கிலியை படித்துள்ளார்.

Covai

அதே போல் கோலார் பட்டியை சேர்ந்த அம்சவேணி என்பவரிடமும் பிஏபி அலுவலகம் அருகே நகை பறிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொள்ளாச்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சபரிகிரி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஏழரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Covai

மேலும் இவர் பல இடங்களில் நடைபெற்ற நகை பருப்பில் தொடர்புள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குற்றவாளி சபரிகிரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.