சென்னையில் பரபரப்பு! தாம்பரம் அருகே நடுரோட்டில் தீப்பற்றி எறிந்த பேருந்து!

சென்னை முதல் திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் - பெருங்களத்தூர் இடையே பேருந்து ஒன்று தீப்பற்றி எறிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை முழுவதுமாக அணைத்துவிட்டனர். தீயில் முற்றிலும் எறிந்த பேருந்தில் மிஞ்சிய வெறும் கம்பிகள் மட்டும் எழும்பு கூடுபோல் காட்சியளிக்கின்றன
ஆனால் விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் கிடைக்கவில்லை. மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டுள்ளதா என்றும் முழுவதுமாக தெரியவில்லை.
இதனால் தாம்பரம் முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாரத்தின் கடைசி வேலைநாள் என்பதால் வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலால் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.