தலைக்கேறிய மது போதை.. பாம்பிற்கு கிஸ் கொடுத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்.!

தலைக்கேறிய மது போதை.. பாம்பிற்கு கிஸ் கொடுத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்.!



Boy death for kissed snake

உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரோகித் ஜெய்சால் என்ற இளைஞர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரோஹித் என்ற இளைஞர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அந்த வகையில் குடித்துவிட்டு சில வித்தியாசமான செயல்கள் மற்றும் அடாவடி செய்து வந்துள்ளார்.

Snake kiss

இந்த நிலையில் போதையில் இருந்த இளைஞர் ஆபத்தை உணராமல் பாம்பிற்கு முத்தம் கொடுத்துள்ளார். அதன்படி அந்த இளைஞர் பாம்பை பிடித்து தனது நாக்கில் வைத்து தேய்த்துள்ளார். இதில் பாம்பின் விஷம் அவரது உடல் முழுவதும் வேகமாக பரவியுள்ளது.

Snake kiss

இதனால் அடுத்த சில நிமிடங்களிலேயே போதை இளைஞர் மயக்கம் அடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.