காதலிக்கு வேறொருவருடன் நிச்சியமானதால் சோகம்.. காதலன் மனமுடைந்து தற்கொலை..!

காதலிக்கு வேறொருவருடன் நிச்சியமானதால் சோகம்.. காதலன் மனமுடைந்து தற்கொலை..!


boy-committed-suicide-for-his-lover-engagement

காதலிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதால், மனமுடைந்த காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு, மஞ்சாலுமூட்டை பகுதியில் வசித்து வந்தவர் அனிஸ் (வயது 23). இவர் கடந்த ஒரு வருடமாக கோயம்புத்தூரில் பீளமேட்டில் தங்கியிருந்த நிலையில், வி.கே.ரோட்டில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் வசித்து வந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில், இந்த விஷயம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவர, இருவரையும் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இளம் பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனையறிந்து மிகவும் மனமுடைந்த அனிஸ் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

kanyakumari

சம்பவ தினத்தன்று விரக்தியில் இருந்த அனிஸ் அதிகாலை நிறுவனத்தில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின் இதுகுறித்து தகவல் அறிந்த பீளமேடு காவல்துறையினர் உடலை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அத்துடன் தற்போதைய காலகட்டத்தில், காதலிக்கு நிச்சயதார்த்தம் என தெரிந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.