கர்ப்பிணிக்கு திடீரென ஏற்பட்ட பிரசவ வலி.! ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை!

கர்ப்பிணிக்கு திடீரென ஏற்பட்ட பிரசவ வலி.! ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை!


born-baby-in-ambulance

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த கமல்ராஜ் என்பவரின் மனைவி முத்துலட்சுமி  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 108 அவசர ஊர்திக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் அழைப்பை ஏற்று உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண்ணை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், முத்து லட்சுமிக்கு தீவிர பிரசவ வலி  ஏற்பட்டுள்ளது. மேலமாத்தூர் கிராமம் அருகே சென்ற போது முத்துலட்சுமிக்கு பிரசவ வலி அதிகரித்ததை உணர்ந்த அவசர கால மருத்துவ நுட்புனர் செல்வகுமார் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தச் சொல்லி வாகன டிரைவர் ஆனந்தன் உதவியுடன் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். 

அப்போது முத்துலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். சிறப்பாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனரையும் மருத்துவ உதவியாளரையும் மருத்துவர்கள் மற்றும் கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.