நடு ரோட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்... தட்டி கேட்ட ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை.!.!

நடு ரோட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம்... தட்டி கேட்ட ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை.!.!



birthday-celebration-in-the-middle-of-the-road-auto-dri

அம்பத்தூரில் நடு ரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதை தட்டி கேட்ட  ஆட்டோ ஓட்டுனர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது நண்பர்களுடன் பிறந்த நாளை நடுரோட்டில் கொண்டாடி இருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் காமேஷ் நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடினால் நாங்கள் எப்படி செல்வது என்று கூறி தட்டி கேட்டு இருக்கிறார்.

tamilnaduஇது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அஜய் மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோ டிரைவர் காமேஷ் செய்யும் அவருடன் இருந்த  அவரது சகோதரரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காமேஷ் அம்பல இடத்திலேயே பலியானார்.

tamilnaduஇந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த அவரது சகோதரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தை தட்டி கேட்ட சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.