வங்கி ஊழியரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!. கொடூர சம்பவம்!.



bank-staff-murdered-in-thirunelveli


திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிசங்கர். இவர் மத்திய கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். 

இசக்கிசங்கர் வழக்குபோல நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக வெள்ளாங்குழி கிராமம் அருகே உள்ள ஆற்றுப்பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இசக்கியை கொலை செய்வதற்காக விரட்டியுள்ளனர். அதிலிருந்து தப்பிக்க முயற்சித்த இசக்கி ஓட்டம் பிடித்துள்ளார்.

மர்மநபர்கள் அவரை சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் காயமடைந்த இசக்கி சங்கர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

bank staffபின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இசக்கி தனது வீட்டின் அருகே உள்ள வேற்று சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் இசக்கி பயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது ஆணவக்கொலையாக இருக்குமா என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். இந்த பயங்கர கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 

கூட்டுறவு வங்கி ஊழியர் இசக்கிசங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.