பகீர்..நில பட்டாவை தர மறுத்த மூதாட்டி.. ஆத்திரத்தில் கொடூரமாக கொலை செய்த பேரன்.!

பகீர்..நில பட்டாவை தர மறுத்த மூதாட்டி.. ஆத்திரத்தில் கொடூரமாக கொலை செய்த பேரன்.!



Bagheer.. The old lady who refused to give the land title.. The grandson brutally murdered in rage.!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளியான மணிகண்டன். இவர் சம்பவத்தன்று தனது பாட்டி நாகம்மாளின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த மூதாட்டி நாகம்மாளிடம் நிலப்பட்டாவை தருமாறு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் நாகம்மாள் பட்டாவை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் கொண்டு வந்த கத்தியால் மூதாட்டி நாகம்மாளின் தலையில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

old lady

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த நாகம்மாள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலைக்கு காரணமான மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.