தமிழகமே அதிர்ச்சி..! 15 வயது மாணவனுடன், 24 வயது டீச்சர் லவ்.. மேரேஜ் டேமேஜாகி தற்கொலை முயற்சி..! போக்ஸோவில் ஆசிரியை கைது.!

தமிழகமே அதிர்ச்சி..! 15 வயது மாணவனுடன், 24 வயது டீச்சர் லவ்.. மேரேஜ் டேமேஜாகி தற்கொலை முயற்சி..! போக்ஸோவில் ஆசிரியை கைது.!



ariyalur-udayarpalayam-sslc-student-24-aged-teacher-lov

வகுப்பறையில் மாணவரின் மீது காதல் வயப்பட்ட ஆசிரியை, மாணவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், இறுதியில் கடும் எதிர்ப்பால் இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். விஷயம் காவல் துறையினருக்கு தெரியவந்து, மைனர் சிறுவனை திருமணம் செய்ததாக ஆசிரியை போக்ஸோவில் கைதாகியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம், மழவராயநல்லூர் கிராமத்தை சார்ந்தவர் முகில் (வயது 17) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முகில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். அங்குள்ள, அம்பாவூர் கிராமத்தை சார்ந்தவர் வினிதா (வயது 24) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

வினிதா கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக பள்ளியில் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்துள்ளார். மாணவர் முகில் பயின்று வந்த வகுப்பில் ஆசிரியை பாடம் எடுத்த நிலையில், ஆசிரியைக்கு முகிலின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டுள்ளார். ஆசிரியை என்ற விஷயத்தை வினிதாவும் மறக்க, காதல் மயக்கத்தில் பருவ ஈர்ப்பால் திணறிக்கிடந்த முகிலும் மாணவன் என்பதை மறந்து காதல் வயப்பட்டுள்ளார். 

Ariyalur

இவர்களின் காதல் வகுப்பறையை விட்டு வெளியேயும் தொடர்ந்த நிலையில், சக மாணவர்களுக்கு விஷயம் தெரிந்தபோதிலும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயம் அரசல் புரசலாக ஆசிரியை வினிதாவின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் மகளை கண்டித்த போதிலும் ஆசிரியை அதனை கேட்கவில்லை. 

பின்னர், விஷயம் மாணவரின் வீடு வரை சென்ற நிலையில், மகனை அவரின் பெற்றோர்கள் கண்டித்தும் பலனில்லை. கடந்த 2 வருடமாக காதலித்து வந்த இருவரும், பெற்றோர்கள் தங்களை சேராவிடமாட்டார்கள் என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்து இருக்கின்றனர். மாணவர் வினோத் பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் அரசு கல்லூரியில் முதல் வருடம் படிக்க தொடங்கியுள்ளார். 

Ariyalur

கடந்த அக். மாதத்தின் போது வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, பெரம்பலூர் மாவட்டம் குன்னம், மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள மாணவனின் பாட்டி தங்கம் என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு வைத்து ஊராருக்கு தெரியாமல் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்ட நிலையில், மறைமுக எதிர்ப்பால் காதல் ஜோடி மனதுடைந்து காணப்பட்டுள்ளது. 

இதனால் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவு செய்து, கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக விஷ மருந்தை குடித்துவிட்டு, காதில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். பின்னர், இருவரும் திடீரென உயிர்பிழைக்க ஆசைப்பட்டு, தங்களின் இருசக்கர வாகனத்தில் குன்னம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி பெற்றுள்ளனர். 

Ariyalur

ஆசிரியையின் உடலில் விஷம் அதிகரித்ததால், மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குன்னம் காவல் துறையினர், மைனர் வயது கொண்ட சிறுவனை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்த ஆசிரியையின் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிகிச்சைக்கு பின்னர் கைது செய்தனர்.

வயது குறைந்த ஆண்களை பெண்கள் காதலித்து திருமணம் செய்வதில் தவறில்லை. ஆனால், மைனர் வயதுள்ள ஆணை கரம்பிடித்தால் கைக்கு போக்ஸோ சட்டத்துடன் காப்பு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.