#BigNews: தைலமரக்காட்டில் 2 பெண்களின் முகத்தை சிதைத்து வெட்டிக்கொலை.. காளான் பறிக்க சென்றவர்களுக்கு துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!

#BigNews: தைலமரக்காட்டில் 2 பெண்களின் முகத்தை சிதைத்து வெட்டிக்கொலை.. காளான் பறிக்க சென்றவர்களுக்கு துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!



Ariyalur Jayankondam 2 women Killed Mystery Police Investigation

 

உணவுக்காக காளான் பறிக்க சென்ற 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம், பெரியபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் தண்டபாணி. இவரின் மனைவி கண்ணகி (வயது 50). இதே கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவரின் மனைவி மலர்விழி (வயது 29). இன்று இவர்கள் இருவரும் தைலமரக்கட்டில் உணவுக்காக காளான் பறிக்க சென்றுள்ளனர். 

பின்னர், நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் மலர்விழியின் போனுக்கு தொடர்பு கொண்டு பார்க்கையில், அது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனையடுத்து, குடுமப்த்தினர் மலர்விழியை தேடி தலைமரக்காட்டு பகுதிக்குள் சென்றுள்ளனர். 

Ariyalur

அந்த சமயத்தில், இருவரின் சைக்கிளும் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அருகே மலர்விழி மற்றும் கண்ணகி முகம் சிதைந்து அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ஜெயங்கொண்டம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பெண்களின் தாலி சங்கிலி திருடப்பட்டு இருந்தது உறுதியானது. இதனால் நகைக்காக கொலை செய்யப்ட்டனரா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.