அண்ணாமலை திமுகவின் "பி" டீமாக செயல்பட்டு வருகிறார்...!! சிவி சண்முகம் ஆக்ரோஷம்...!!

அண்ணாமலை திமுகவின் "பி" டீமாக செயல்பட்டு வருகிறார்...!! சிவி சண்முகம் ஆக்ரோஷம்...!!



Annamalai is working as "B" team of DMK... CV Shanmugam

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் என்று  ஆவேசமாக கூறியுள்ளார். 

தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் தற்போது அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். எனவே தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் கூற முடியும் என்று கூறியிருந்தார்.

அதிமுகவினரிடையே அண்ணாமலையின் இந்த கருத்து மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலையின் இந்த விமர்சனத்துக்கு அ.தி மு க வினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:- 

ஆளுமைகிக்க தலைவி ஜெயலலிதாவை குறித்து கருத்துச் சொல்ல அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது. பாரதிய ஜனதா கட்சி என்பது வேறு. அண்ணாமலை என்பவர் வேறு. அண்ணாமலை ஒரு கவுன்சிலராக கூட இருந்ததில்லை. அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம். அண்ணாமலை மீது சொந்தக் கட்சியினரே ஊழல் புகார் கூறி வருகின்றனர். அண்ணாமலை திமுகவின் "பி" டீமாக செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவிலேயே ஒரு கட்சியினுடைய தலைவர் ஊழல் செய்ததற்காக தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாஜக கட்சியின் தலைவர் தான். அண்ணாமலைக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது அவர் கட்சியில் இல்லை. ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல மாமூல் வாங்கி கொண்டு இருந்திருப்பார் என்று கூறினார்.