தமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள்! சந்தோசத்தில் பொதுமக்கள்!

தமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள்! சந்தோசத்தில் பொதுமக்கள்!



again 2 new district in Tamilnadu


தென்காசி, செங்கல்பட்டு ஆகிய நகரங்கள் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். 

தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டை தனி மாவட்டமாக அறிவிக்க நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக அறிவிக்க நீண்ட நாட்களாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

thenkasi

இந்தநிலையில் காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டமாகவும், திருநெல்வேலியை பிரித்து தென்காசி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் உருவாக்கப்படும் என விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதிதாக அறிவிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.