நெல்லையில் பயங்கரம்... அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை... குற்றவாளிகளுக்கு வலை வீச்சு.!



admk-executive-was-brutally-murdered-in-tirunelveli-pol

திருநெல்வேலியில்  பேட்டை  அதிமுக முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர் வெற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர்  கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி பேட்டையை அடுத்த மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் பிச்சை ராஜ்(52). இவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்தில் முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர். நடந்து முடிந்து உள்ளாட்சி தேர்தலிலும் திருநெல்வேலி மாநகராட்சியின் 18 வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டார். இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றையும்  நடத்தி வந்தார்.

tamilnaduஇந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது வீரபாகு நகர் ரயில்வே சுரங்கம் அருகே பதுங்கி இருந்த மர்ம நபர்கள்  இவர் சென்ற இருசக்கர வாகனத்தை மறித்து இவர் மீது சரமாரியாக பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்தார் பிச்சை ராஜ்.

tamilnaduஇதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பிச்சை ராஜை மீட்டு  திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை புரிந்த திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் அனிதா விசாரணை நடத்தினர். இதனையடுத்து பேட்டை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.