Breaking: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Breaking: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்



additinal-3-corono-positive-cases-in-tamilnadu

தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 3 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 180 பேருக்கு மேல் தொற்றியுள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Coronovirus

தமிழகத்தில் நேற்று வரை 3 பேராக இருந்த கொரோனா தொற்று இன்று 6 ஆக உயர்ந்துள்ளது. இதில் முதல் நபர் குணமடைந்துவிட்டார் என்பது ஆறுதலான செய்தி.

இன்று கண்டறியப்பட்ட 3 பேர்களில்  2 பேர் தாய்லாந்து மற்றும் ஒருவர் நியூசிலாந்தில் இருந்து வந்தவர் என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் கண்டறியப்பட்ட 6 பேருமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இதனை தொடர்ந்து தமிழத்தின் ரெயில், உள் மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்கள், எல்லைகள் ஆகியவற்றில் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.