சொந்த ஊரில் கலந்த நடிகர் மாரிமுத்துவின் உடல்! விடைபெற்றார் மாரிமுத்து!!
சொந்த ஊரில் கலந்த நடிகர் மாரிமுத்துவின் உடல்! விடைபெற்றார் மாரிமுத்து!!
இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து, கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர். இவர் நிறைய படங்களில் பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.
குணசேகரன் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த அவர் நேற்று காலை 08:30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனீ மாவட்டம் பசுமலைத்தேரிக்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.