பெண்கள் விடுதியில் பகீர் சம்பவம்: தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பிய இளம்பெண்..!

பெண்கள் விடுதியில் பகீர் சம்பவம்: தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பிய இளம்பெண்..!



a-young-girl-approached-her-boyfriend-after-taking-a-vi

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியையை சேர்ந்தவர் ஆஷிக் (31). இவர் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். ஆஷிக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில், இவரது கிளினிக் அருகேயுள்ள வீட்டில் வசிப்பவர் காளீஸ்வரி. ஆஷிக்கும், காளீஸ்வரியும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே காளீஸ்வரி மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, பி.எட் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், காளீஸ்வரி தன்னுடன் தங்கி படிக்கும் விடுதி பெண்கள் குளிப்பதை செல்ஃபோனில் வீடியோ எடுத்து தனது நண்பரான ஆஷிக்கிற்கு அனுப்பி வந்துள்ளார். இது குறித்து அறிந்த பெண் ஒருவர் விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் காளீஸ்வரியின் செல்பேனை ஆய்வு செய்து பார்த்ததில் பொகார் உண்மை என்பது தெரியவந்தது.

பின்னர் இந்த சம்பவம் குறித்து, மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் விடுதி காப்பாளர் புகாரளித்தார். இது தொடர்பாக காவல்தூறையினர் விசாரணை நடத்தியதில் செல்போனில் பெண்கள் குளியல் காட்சிகள் மற்றும் உடைமாற்றும் காட்சிகள் பகிரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆஷிக் மற்றும் காளீஸ்வரியை காவல்துறையினர் கைது செய்தனர்.