கணவரிடம் இருந்து இரண்டாவது முறையாக... கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்..!!

கணவரிடம் இருந்து இரண்டாவது முறையாக... கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்..!!



a-woman-who-ran-for-the-second-time-with-her-2-daughter

கோவையில் தனது 2 பெண் குழந்தைகளுடன் கள்ளக்காதலனுடன் இரண்டாவது முறையாக ஓட்டம் பிடித்த பெண். 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் 37 வயது பெண். இவருக்கு 7 வருடங்களுக்கு முன் திருமணமானது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இரண்டு பெண் குழந்தைகளின் தாயான அந்த பெண்ணுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இவர்களின்  தகாத உறவைப் பற்றி அக்கம் பக்கத்தினர் மூலமாக பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 7 மாதங்களுக்கு முன் அந்த பெண் தனது ஆண் நண்பருடன் ஓட்டம் பிடித்தார். இது தொடர்பாக பெண்ணின் கணவர் தனது மனைவியை கண்டுபிடித்து கொடுக்குமாறு புகார் அளித்தார். 

காவல்துறையினர்  கள்ளக்காதலனுடன் தங்கியிருந்த பெண்ணை கண்டுபிடித்து மீட்டனர். அந்த பெண்ணிடம் அறிவுரை கூறி அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர். கணவருடன் வாழ திரும்பி வந்த பெண் தொடர்ந்து தனது கள்ளக்காதலனுடன் பழகி வந்தார். கணவர் வேலைக்கு சென்ற பிறகு கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்தார். இதனால் கணவன்,மனைவிக்கு இடையே தகராறு உண்டானது. 

எனவே, கணவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மீண்டும் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அவரது கணவர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை தேடி வருகின்றனர்.