பணம் வசூலிக்க வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து..... பலாத்காரம் செய்த காமக் கொடூரன்...!!

பணம் வசூலிக்க வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து..... பலாத்காரம் செய்த காமக் கொடூரன்...!!



A woman who came to collect money was mixed with anesthetic in cold drink and raped...

கடணை வசூலிக்க வந்த பெண்ணுக்கு மதுபானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து  வைத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அருகே செங்குன்றம் சோழவரம் பகுதியைச் சேர்ந்த  42 வயது பெண் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.  மேலும் அந்த பகுதியில் இருகங பெண்களுக்கு மகளிர் குழுக்கள் மூலம் கடன் பெற்று கொடுத்துள்ளார்.
அந்த பகுதியில் இருக்கும் ஓட்டல் ஒன்றில் சமையல் வேலை செய்து வந்த சுரேஷ்குமார் என்கிற வாலிபருக்கும் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.  

கடனை வாங்கிவிட்டு தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். பலமுறை கேட்டும் கடன் தொகையை செலுத்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் அந்தப் பெண்ணை போனில் தொடர்பு கொண்ட சுரேஷ்குமார், தவணைத்தொகை முழுவதையும் கொடுத்து விடுகிறேன். வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார்.

அந்த பெண் பணம் வசூலிக்க சுரேஷ் குமார் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அவரது வீட்டிற்கு சென்று பேசிக் கொண்டிருந்த போது குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார்.  அதை குடித்த அந்த பெண் மயக்கம் அடைந்துள்ளார். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார் சுரேஷ்குமார். அந்த பெண் மயங்கியதும் பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். 

அந்த வீடியோவை காட்டி மிரட்டி பலமுறை அ‌ந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வீடியோவை காட்டி அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.  தொல்லை தாங்க முடியாத அந்த பெண் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விஷயம் தெரிந்ததும் சுரேஷ்குமார் தலைமறைவாகிவிட்டார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சுரேஷ்குமாரின் செல்போன் சிக்னலை வைத்து அவரை கைது செய்தனர்.