மார்பை அறுத்து... உடல் உறுப்புகளை சிதைத்து... பெண் படுகொலை... காணாமல் போன கள்ளக்கானுக்கு வலைவீச்சு!

மார்பை அறுத்து... உடல் உறுப்புகளை சிதைத்து... பெண் படுகொலை... காணாமல் போன கள்ளக்கானுக்கு வலைவீச்சு!


a-woman-was-brutally-murdered-by-an-unidentified-man-po

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுக்கா  கண்டமனூரை அடுத்துள்ள  பொன்னம்மாள் பெட்டியை சேர்ந்தவர் சமுத்திரக்கனி வயது 48.  இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பே அவரது கணவர் இறந்து விட்டார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை விபத்தில் இவரது மகனும் இறந்துள்ளார்.

தனது இரண்டு மகள்களையும சமுத்திரகனி தான், பெட்டி கடை வைத்து பிழைப்பு நடத்தி திருமணம் செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை இவரது வீட்டிற்கு முன்பு ரத்த வெள்ளத்தில் கடந்து இருக்கிறார் சமுத்திரக்கனி. அவரது மார்பு பகுதி அறுக்கப்பட்டு இருக்கிறது மேலும்  உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள உறுப்புகளும் சிதைந்துள்ளன.

thenimurder

அந்தப் பகுதி வழியாக பால் கறக்க சென்றவர்கள்  சமுத்திரக்கனி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர.. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விசாரணையின் போது அந்தப் பகுதியைச் சார்ந்த சொக்கன் என்பவர் மீது  காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அவரை விசாரிப்பதற்காக சென்றபோது அவர் காணாமல் போய் இருக்கிறார். இதனால் காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் சொக்கனும் சமுத்திரக்கனியும் கள்ளக்காதலில் இருந்தார்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது இதனால்  கள்ளக்காதல் பிரச்சனையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல் போன சொக்கனையும்  தீவிரமாக தேடி வருகின்றனர்.