சோகத்தில் முடிந்த நண்பர்களின் ஜாலி டிரிப்: ஏரியில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவர்..!

சோகத்தில் முடிந்த நண்பர்களின் ஜாலி டிரிப்: ஏரியில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவர்..!



A student died tragically after drowning in the lake

சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (17) இவர் கோவூர் பகுதியில் இயங்கிவரும் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். ஜெகதீசன் தனது நண்பர்கள் சூர்யா, யுவராஜ் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரிக்குச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் அவரது நண்பர்கள் ஏரியில் இறங்கிக் குளித்துள்ளனர்.

நீச்சல் தெரியாததால் ஜெகதீசன் படியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை நண்பர்கள் நீச்சல் அடிக்கும்படி வற்புறுத்தி ஏரியில் இறக்கியுள்ளனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஜெகதீசன் நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்கப் போராடியுள்ளனர். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை.

பின்னர் இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஏரியில் ஜெயதீசன் உடலை தேடினர். பின்நர் நீண்ட நேரத்திற்குப் பிறகு ஜெகதீசனின் உயிரில்லாத உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் தெரியாமல் பள்ளி மாணவர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.